ஆப்நகரம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைப் பாராட்டிய பிரதமர் மோடி!!

கால்வாயை சுத்தப்படுத்திய புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமியை, பிரதமர் மோடி பாராட்டி ட்விட் ஒன்றை செய்துள்ளார்.

Samayam Tamil 2 Oct 2018, 9:08 pm
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கால்வாயை சுத்தப்படுத்திய புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமியை, பிரதமர் மோடி பாராட்டி ட்விட் ஒன்றை செய்துள்ளார்.
Samayam Tamil புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைப் பாராட்டிய பிரதமர் மோடி!!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைப் பாராட்டிய பிரதமர் மோடி!!


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நடவடிக்கைகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நெல்லித்தோப்பு தொகுதியில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அப்போது, அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அங்கிருந்த சாக்கடை கால்வாயில் இறங்கி, அதைத் தூர்வாரினார். அதைப் பார்த்த டெல்லி பிரதிநிதி ஜான் குமாரும் அவருடன் இணைந்து சாக்கடை கால்வாயைத் தூர்வாரத் தொடங்கினார்.

இது தொடர்பான வீடியோவை முதல்வர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், பிரதமர் மோடி அவரைப் பாராட்டி ட்விட் செய்துள்ளார். அதில், “தூய்மை இந்தியா திட்டத்தை முன்னின்று நடத்துவதற்கும், அதை வலுப்படுத்துவதற்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி