ஆப்நகரம்

நமஸ்தே சொன்னதற்கு எம்.பி.கள் ரிப்ளே பண்ணாததால் காண்டான மோடி!

‘நமோ’ அப்பில் பிரதமர் மோடிக்கு யாரும் ரிப்ளே செய்யாததால் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

TNN 29 Dec 2017, 11:07 am
‘நமோ’ அப்பில் பிரதமர் மோடிக்கு யாரும் ரிப்ளே செய்யாததால் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil prime minister modi is disappointed that bjp mps are not seeing messages in namo app
நமஸ்தே சொன்னதற்கு எம்.பி.கள் ரிப்ளே பண்ணாததால் காண்டான மோடி!


பிரதமர் மோடி பாஜக எம்.பிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள ‘நமோ’ என்ற அப்பை பயன்படுத்துகிறார். நரேந்திர மோடி என்பதை சுருக்கி ‘நமோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அப்பின் மூலம் எம்பிக்களும் பொதுமக்களும் பிரதமர் அனுப்பும் செய்திகளையும் மின்னஞ்சல்களையும் பார்க்க முடியும்.

இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பேசிய மோடி, தினமும் நமோ அப் மூலம் தான் அனுப்பும் நமஸ்தே செய்திக்கு நான்கு அல்லது ஐந்து பேரைத் தவிர யாரும் ரிப்ளே செய்வதில்லை என்று அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம், அதில் அனுப்பப்படும் செய்திகளை யாரும் படிப்பதில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி