ஆப்நகரம்

முதல் முறையாக மாலத்தீவுகளுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக நவம்பர் 17 ஆம் தேதி மாலத்தீவுகளுக்குச் செல்ல உள்ளார்.

Samayam Tamil 10 Nov 2018, 1:39 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக நவம்பர் 17 ஆம் தேதி மாலத்தீவுகளுக்குச் செல்ல உள்ளார்.
Samayam Tamil முதல் முறையாக மாலத்தீவுகளுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!!
முதல் முறையாக மாலத்தீவுகளுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!!


கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி மாலத்தீவுகளில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான மாலத்தீவுகள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இப்ராஹீம் முகமது சோஹ்லி வெற்றிப் பெற்றார். இதனால், தற்போது அதிபராக இருக்கும் அப்துல்லா யமீன் விரைவில் பதவி விலக உள்ளார்.

இந்நிலையில் இப்ராஹீம் முகமது சோஹ்லியின் பதவியேற்பு விழா வரும் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை போனில் தொடர்புகொண்டு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். அவர் அழைப்பையேற்று, பிரதமர் மோடி நவம்பர் 17 ஆம் தேதி மாலத்தீவுகளுக்குச் செல்ல உள்ளார்.

SAARC கூட்டமைப்பின் எல்லா நாடுகளுக்கும் சென்றுள்ள பிரதமர் மோடி, இதுவரை மாலத்தீவுகளுக்கு மட்டும்தான் செல்லவில்லை. கடந்த மார்ச் மாதமே, அங்கு செல்ல திட்டமிட்டிருந்த போதும், அங்கு நிலவிய அரசியல் சூழல் காரணமாக அது ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி