ஆப்நகரம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டுச்சென்றார்.

Samayam Tamil 9 Jun 2018, 9:24 am
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டுச்சென்றார்.
Samayam Tamil ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!


ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.

அந்தவகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 18-வது உச்சி மாநாடு, சீனாவின் ஷான்டாங் மாகாணத்தின் க்விங்டாவ் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சீனா புறப்பட்டு சென்றார்.

பல்வேறு துறைகளில் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.


இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி இன்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல இந்த மாநாட்டில் பங்கேற்கும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் மற்ற தலைவர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒரு மாத கால இடைவேளையில் மோடி இப்போது இரண்டாவது முறையாக சீனா செல்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி