ஆப்நகரம்

ஐ.நாவில் இன்று பேசும் பிரதமர் மோடி

ஐ.நாவின் பொது சபையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்ற உள்ளார்.

Samayam Tamil 26 Sep 2020, 6:19 am
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
Samayam Tamil modi


அந்தவகையில் 75 ஆண்டுகால ஐநா வரலாற்றில் முதன்முறையாக ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் உலகத் தலைவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமல் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலமே நடைபெறுகிறது. கூட்டத்தில் பேசவுள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தங்களது உரைகளைப் பேசி அதை வீடியோவாக பதிவு செய்து அனுப்பிவிட வேண்டும். அந்த வீடியோ கூட்டத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்,

பாலியல் குற்றவாளிகளுக்கு யோகியின் வித்தியாசமான தண்டனை!

இன்றைய பொதுக் கூட்டத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் பிரதமர் மோடியின் உரை இடம்பெறவுள்ளது.

அடுத்த இரு வாரங்களில் ஐநா சபையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும் பொது விவாதம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கிய விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆத்தி... ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா; மோசத்திலும் மோசமாக மாறிய பெங்களூரு!

கூட்டத்தில் பேசும் முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடியின் உரை அமையவுள்ளது.

அடுத்த செய்தி