ஆப்நகரம்

லடாக்கில் பிரதமர் மோடி சர்ப்ரைஸ் விசிட் - என்ன காரணம்?

சீன ராணுவத்துடனான பதற்றமான சூழலை அடுத்து லடாக்கிற்கு பிரதமர் மோடி இன்று திடீர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

Samayam Tamil 3 Jul 2020, 10:58 am
இந்திய - சீன எல்லையில் கடந்த மாதம் நடைபெற்ற கடும் மோதலில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதன் எதிரொலியாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை லடாக்கிற்கு பிரதமர் மோடி திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவனே ஆகியோருடன் உடன் சென்றுள்ளார். தற்போது லடாக்கின் நிமு பகுதியில் தங்கியிருக்கிறார்.
Samayam Tamil Modi at Ladakh


இது கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் ஸன்ஸ்கர் ரேஞ்ச் மற்றும் இந்துஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்கு ராணுவம், விமானப்படை மற்றும் இந்தோ - திபெத் எல்லையோர காவல்படையினர் உடன் உரையாடினார்.

ரவுடிக்கு பிளான் போட்ட போலீஸ்; பதறவைத்த கிரிமினல்கள் - நாட்டையே உலுக்கிய அதிகாலை அதிர்ச்சி!

மோடியின் பயணம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லையின் முன்களப் பகுதிகளில் ஒன்றான நிமுவில் பிரதமர் மோடி தற்போது உள்ளார். இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்றடைந்தார்.

அங்கு ராணுவ அதிகாரிகளிடம் எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிகிறார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த முறை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, லடாக்கில் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

கொரோனா: பெற்ற தாயை பேருந்து நிலையத்தில் பரிதவிக்க விட்டு சென்ற மகன்

நட்பை கொண்டாடவும் தெரியும். அதேசமயம் யாராவது அத்துமீறினால் வலுவான எதிர்ப்பைக் காட்டவும் முடியும். இதனை எங்களது வீரமிக்க படையினர் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். தாய் நாட்டை காப்பதற்காக எந்தவொரு எல்லைக்கு செல்ல தயங்க மாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி