ஆப்நகரம்

கர்நாடகாவில் தாமரை மலர நேபாளத்தில் பூஜை செய்த பிரதமர்

அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி காத்மாண்டு அருகிலுள்ள முக்திநாத் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Samayam Tamil 12 May 2018, 12:58 pm
அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி காத்மாண்டு அருகிலுள்ள முக்திநாத் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Samayam Tamil modi_10270


பிரதமர் மோடிஇரண்டு நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார். நேற்று காலை ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த மோடியை, நேபாள ராணுவ மந்திரிஈஸ்வர் போக்ரேல் வரவேற்றார். அதன்பிறகு சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஜானக்பூரில் உள்ள ஜானகி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஜானக்பூரின்வளர்சிக்காக ரு. 100 கோடி நிதி உதவியை பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று காத்மாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். மேலும் மோடியின் வருகையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றவே மோடி, அதிக நேரம் பூஜை செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முக்திநாத் கோவிலில் மோடி பூஜை செய்யும் வீடியோவை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி