ஆப்நகரம்

அயோத்தி வழக்கு தீர்ப்பு: மோடி ரியாக்‌ஷன்!

அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Nov 2019, 1:09 pm
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) தீர்ப்பு வழங்கியுள்ளது.
Samayam Tamil அயோத்தி வழக்கு தீர்ப்பு


அயோத்தி வழக்கு தீர்ப்பு: மோடிக்கு சுப்பிரமணியன் சாமி வைத்த கோரிக்கை!

அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Babri Masjid Land: அயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு!!

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“அனைத்து தரப்பும் ஏற்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கருதுகிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும் தோல்வியாகவும் பார்க்கக்கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையையும் அமைதியையும் உறுதிபடுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்சினைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்கவகையில் தீர்வுகாண முடியும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி