நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய பட்ஜெட் 2020-21 தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து நாளுக்கு நாள் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதால் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தற்போது பேசி வருகிறார்.
லைவ் அப்டேட்ஸ்:
* அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுங்கள் என்று சிலர் பேசுவதை கேட்க முடிகிறது. நான் அதை ஒத்துக் கொள்கிறேன். இதனை நாளொன்றுக்கு 100 முறை காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்கள் தங்கள் கடந்த கால தவறுகளில் இருந்து உணர முடியும். அவசர நிலை பிரகடனத்தின் போது இதுபோன்ற கோஷங்களை கேட்கவில்லையா? அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அமைச்சரவை தீர்மானங்கள் கிழித்தெறியப்பட்டதை மறந்து விட்டீர்களா?
* இதற்கிடையில் ராகுல் காந்தி குறுக்கிட முயன்றார். அதைக் கண்ட பிரதமர் மோடி, நான் பேசும் விஷயங்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தான், கடந்த 30 - 40 நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் சில டியூப் லைட்கள் இப்படித் தான் செய்வார்கள் என்று நக்கலாக கூறியிருக்கிறார்.
* இன்னும் 6 மாதத்தில் இளைஞர்கள் மோடியை தடியால் அடிக்கப் போகின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் கூறியதை கேள்விப்பட்டேன். எனவே சூர்ய நமஸ்காரத்தை அதிகளவு செய்ய தீர்மானித்திருக்கிறேன். அப்போது தான் எனது பின்புறம் வலிமை அடைந்து, வலியை தாங்கும் பக்குவம் கிடைக்கும்.
* விலை உயர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார மேம்பட வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
* அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில மாநிலங்கள் பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படுத்தி தர மறுக்கின்றனர். அவர்களிடம் கேட்டு கொள்வதெல்லாம், விவசாயிகள் நலனில் அரசியல் வேண்டாம். இந்திய விவசாயிகளின் நிலையை உயர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
* போடோ விவகாரம் முதல்முறை விஸ்வரூபம் எடுக்கவில்லை. நாங்கள் அப்படி சொல்லவில்லை. பலமுறை இதுதொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அரசியல் காரணமாக இதுபோன்று நிகழ்ந்துள்ளது.
ஆபாச பட விவகாரம் - சிக்குனா அவ்வளவு தான்; களையெடுக்க தயாரான மத்திய அரசு!
* விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்து குடியரசுத் தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். குறைந்தபட்ச விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாகவே நிலுவையில் இருந்து வந்துள்ளது. இதற்கு நாங்கள் தீர்வு கண்டிருக்கிறோம். இது பயிர் பாதுகாப்பு, பாசன வசதி போன்றவற்றிற்கும் பொருந்தும்.
* பல ஆண்டுகளாக தொலைதூரம் என்ற காரணத்தால் வடகிழக்கு பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால் காலம் மாறிவிட்டது. வடகிழக்கு பகுதிகள் வளர்ச்சிக்கான எந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் மிகச்சிறப்பான மாற்றங்களை காண முடிகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும் வடகிழக்கு மாநிலங்களை தொடர்ச்சியாக பார்வையிட்டு வருகின்றனர்.
* பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் காலம் தாழ்த்தப்படுவதை இந்தியா இனிமேலும் விரும்பாது. எனவே தான் வேகத்துடனும், தீர்மானத்துடனும், தீர்வு காணும் எண்ணத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
* அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிமுகப்படுத்திய ஃபிட் இந்தியா இயக்கத்தை அதிர் ரஞ்சன் சவுத்ரி மிகச் சிறப்பாக பிரபலப்படுத்தி வருகிறார். அவரது பேச்சின் போது உடற்பயிற்சி செய்வதை நன்றாக காண முடிகிறது.
ராமர் கோயில் எப்போது கட்டப்படும்?- இப்படியொரு ஹேப்பி நியூஸ் சொன்ன பிரதமர் மோடி!
* இந்திய மக்கள் நமது அரசை மட்டும் மாற்றி அமைக்கவில்லை. பரஸ்பர செயல்பாடுகளையும் மாற்றி அமைக்க விரும்புகின்றனர். நாம் பழமையான வழிகளிலும், சிந்தனையிலும் செயல்பட்டு கொண்டிருந்தால் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்திருக்க முடியாது. முஸ்லீம் பெண்கள் முத்தலாக் விவகாரத்தில் தொடர்ந்து சிரமப்பட்டு வந்திருப்பர். ராமர் ஜென்ம பூமி விவகாரம் தீர்க்கப்படாமலே இருந்திருக்கும். கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் உருவாக்கப்படாமலே போயிருக்கும். இந்தியா - வங்கதேசம் இடையில் ஒப்பந்தம் ஏதும் ஏற்பட்டிருக்காது.
* புதிய இந்தியாவின் பார்வையை குடியரசுத் தலைவர் தனது உரையில் மேற்கோள் காட்டி பேசினார். அவருடைய கருத்துகள் நடப்பு நூற்றாண்டின் மூன்றாம் பகுதிக்குள் நுழையும் தருவாயில் நமக்கு கிடைத்துள்ளது. நம்பிக்கை ஊற்றை விதைக்கும் வகையிலும், நமது நாட்டின் எதிர்காலத்திற்கு வழித்தடம் அமைத்து தரும் வகையில் குடியரசு தலைவர் பேசியுள்ளார்.
லைவ் அப்டேட்ஸ்:
* அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுங்கள் என்று சிலர் பேசுவதை கேட்க முடிகிறது. நான் அதை ஒத்துக் கொள்கிறேன். இதனை நாளொன்றுக்கு 100 முறை காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்கள் தங்கள் கடந்த கால தவறுகளில் இருந்து உணர முடியும். அவசர நிலை பிரகடனத்தின் போது இதுபோன்ற கோஷங்களை கேட்கவில்லையா? அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, அமைச்சரவை தீர்மானங்கள் கிழித்தெறியப்பட்டதை மறந்து விட்டீர்களா?
* இதற்கிடையில் ராகுல் காந்தி குறுக்கிட முயன்றார். அதைக் கண்ட பிரதமர் மோடி, நான் பேசும் விஷயங்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தான், கடந்த 30 - 40 நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் சில டியூப் லைட்கள் இப்படித் தான் செய்வார்கள் என்று நக்கலாக கூறியிருக்கிறார்.
* இன்னும் 6 மாதத்தில் இளைஞர்கள் மோடியை தடியால் அடிக்கப் போகின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் கூறியதை கேள்விப்பட்டேன். எனவே சூர்ய நமஸ்காரத்தை அதிகளவு செய்ய தீர்மானித்திருக்கிறேன். அப்போது தான் எனது பின்புறம் வலிமை அடைந்து, வலியை தாங்கும் பக்குவம் கிடைக்கும்.
* விலை உயர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார மேம்பட வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
* அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில மாநிலங்கள் பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படுத்தி தர மறுக்கின்றனர். அவர்களிடம் கேட்டு கொள்வதெல்லாம், விவசாயிகள் நலனில் அரசியல் வேண்டாம். இந்திய விவசாயிகளின் நிலையை உயர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
* போடோ விவகாரம் முதல்முறை விஸ்வரூபம் எடுக்கவில்லை. நாங்கள் அப்படி சொல்லவில்லை. பலமுறை இதுதொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. அரசியல் காரணமாக இதுபோன்று நிகழ்ந்துள்ளது.
ஆபாச பட விவகாரம் - சிக்குனா அவ்வளவு தான்; களையெடுக்க தயாரான மத்திய அரசு!
* விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்து குடியரசுத் தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். குறைந்தபட்ச விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாகவே நிலுவையில் இருந்து வந்துள்ளது. இதற்கு நாங்கள் தீர்வு கண்டிருக்கிறோம். இது பயிர் பாதுகாப்பு, பாசன வசதி போன்றவற்றிற்கும் பொருந்தும்.
* பல ஆண்டுகளாக தொலைதூரம் என்ற காரணத்தால் வடகிழக்கு பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால் காலம் மாறிவிட்டது. வடகிழக்கு பகுதிகள் வளர்ச்சிக்கான எந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் மிகச்சிறப்பான மாற்றங்களை காண முடிகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும் வடகிழக்கு மாநிலங்களை தொடர்ச்சியாக பார்வையிட்டு வருகின்றனர்.
* பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் காலம் தாழ்த்தப்படுவதை இந்தியா இனிமேலும் விரும்பாது. எனவே தான் வேகத்துடனும், தீர்மானத்துடனும், தீர்வு காணும் எண்ணத்திலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
* அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிமுகப்படுத்திய ஃபிட் இந்தியா இயக்கத்தை அதிர் ரஞ்சன் சவுத்ரி மிகச் சிறப்பாக பிரபலப்படுத்தி வருகிறார். அவரது பேச்சின் போது உடற்பயிற்சி செய்வதை நன்றாக காண முடிகிறது.
ராமர் கோயில் எப்போது கட்டப்படும்?- இப்படியொரு ஹேப்பி நியூஸ் சொன்ன பிரதமர் மோடி!
* இந்திய மக்கள் நமது அரசை மட்டும் மாற்றி அமைக்கவில்லை. பரஸ்பர செயல்பாடுகளையும் மாற்றி அமைக்க விரும்புகின்றனர். நாம் பழமையான வழிகளிலும், சிந்தனையிலும் செயல்பட்டு கொண்டிருந்தால் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்திருக்க முடியாது. முஸ்லீம் பெண்கள் முத்தலாக் விவகாரத்தில் தொடர்ந்து சிரமப்பட்டு வந்திருப்பர். ராமர் ஜென்ம பூமி விவகாரம் தீர்க்கப்படாமலே இருந்திருக்கும். கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் உருவாக்கப்படாமலே போயிருக்கும். இந்தியா - வங்கதேசம் இடையில் ஒப்பந்தம் ஏதும் ஏற்பட்டிருக்காது.
* புதிய இந்தியாவின் பார்வையை குடியரசுத் தலைவர் தனது உரையில் மேற்கோள் காட்டி பேசினார். அவருடைய கருத்துகள் நடப்பு நூற்றாண்டின் மூன்றாம் பகுதிக்குள் நுழையும் தருவாயில் நமக்கு கிடைத்துள்ளது. நம்பிக்கை ஊற்றை விதைக்கும் வகையிலும், நமது நாட்டின் எதிர்காலத்திற்கு வழித்தடம் அமைத்து தரும் வகையில் குடியரசு தலைவர் பேசியுள்ளார்.