ஆப்நகரம்

Independence Day 2019: இன்று 73வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

Samayam Tamil 15 Aug 2019, 8:20 am
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று(ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற மக்களின் தியாகத்தால் நமது நாடு சுதந்திரக் கனியை பறித்தது. இதற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை வரை ஏராளமானோர் பாடுபட்டுள்ளனர்.
Samayam Tamil Modi Flag


சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செங்கோட்டை வந்த அவர், அங்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

Also Read:

சுதந்திர தின நாளில் இப்படியொரு கவுரவம்; விங் கமாண்டர் அபிநந்தனுக்கு 'வீர் சக்ரா’ விருது!

கவுரவிக்கப்படும் தமிழக காவலர்கள்; 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு!

காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை பாராட்டியது ஏன்..? ரஜினி சொன்ன பதில்..!

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மூவர்ணக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.

அடுத்த செய்தி