அகமதாபாத்: பிரதமர் பதவியை பாஜக செய்தது போல், நாங்கள் அவமதிக்க மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சமூக வலை ஆர்வலர்கள் மத்தியின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மோடி எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பிரதமரை அவமதிக்கும் வகையில் பேசினார். ஆனால் அவ்வாறு காங்கிரஸ் கட்சி செயல்படாது. மோடியின் தவறுகளைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும் என்றும், பிரதமர் பதவியை அவமதிக்கக் கூடாது.
இவ்வாறு செய்வதால், பாஜகவில் இருந்து நாம் வேறுபட்டு நிற்போம். அதேபோல் மக்கள் மனதிலும் நிற்போம். பிரதமர் மோடியை விமர்சிக்கும் போது, குறிப்பிட்ட எல்லை வரையறை வைத்துக் கொள்ள வேண்டும்.
எனது சமூக வலைத்தள பக்கம் அரசியல் ரீதியான பதிவுகளுக்கு மட்டுமே. எந்தவொரு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கும் அல்ல. நாம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
இதையடுத்து வெற்றி முகம் கண்டு, மகிழ்ச்சியான புது அரசியல் சரித்திரம் படைப்போம் என்று ராகுல் காந்தி கூறினார்.
Prime Minister won't be critisized by Congress says Rahul Gandhi.
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சமூக வலை ஆர்வலர்கள் மத்தியின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மோடி எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பிரதமரை அவமதிக்கும் வகையில் பேசினார். ஆனால் அவ்வாறு காங்கிரஸ் கட்சி செயல்படாது. மோடியின் தவறுகளைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும் என்றும், பிரதமர் பதவியை அவமதிக்கக் கூடாது.
இவ்வாறு செய்வதால், பாஜகவில் இருந்து நாம் வேறுபட்டு நிற்போம். அதேபோல் மக்கள் மனதிலும் நிற்போம். பிரதமர் மோடியை விமர்சிக்கும் போது, குறிப்பிட்ட எல்லை வரையறை வைத்துக் கொள்ள வேண்டும்.
எனது சமூக வலைத்தள பக்கம் அரசியல் ரீதியான பதிவுகளுக்கு மட்டுமே. எந்தவொரு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கும் அல்ல. நாம் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
இதையடுத்து வெற்றி முகம் கண்டு, மகிழ்ச்சியான புது அரசியல் சரித்திரம் படைப்போம் என்று ராகுல் காந்தி கூறினார்.
Prime Minister won't be critisized by Congress says Rahul Gandhi.