ஆப்நகரம்

ஜாட் இன மக்கள் சிறை நிரப்பும் போராட்டம்

ஜாட் இன மக்கள் இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளதால் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNN 1 May 2016, 2:18 pm
சண்டிகர்: ஜாட் இன மக்கள் இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளதால் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil prison fills protest annnounced by jat community
ஜாட் இன மக்கள் சிறை நிரப்பும் போராட்டம்


இட ஒதுக்கீடு கோரி ஜாட் இட மக்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி, ஜாட் இன மக்கள் இன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதனால் அங்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகில பாரதிய ஜாட் சமூக சமிதி அமைப்பு , ஜாட் யுவ ஏக்தா மஞ்சு அமைப்பினர் இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துகின்றனர்.

அடுத்த செய்தி