ஆப்நகரம்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்தில் தீ!

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்தில் தீ!

TOI Contributor 30 Apr 2017, 9:56 pm
ஹைதராபாத் : திருமணத்திற்காக விசாகபட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஏசி பேருந்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. பயணித்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Samayam Tamil private bus carrying 40 passengers catches fire near vizag
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பேருந்தில் தீ!


ஹைதராபாத்தில் இருந்து விசாகபட்டினத்தில் நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 40 பேர் ஏசி பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். பேருந்து விசாகபட்டினம் மாவட்டம் கசிம்கோட்டா மன்டல் அருகே பர்வடா பலேம் எனும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்துள்ளது. பேருந்தில் இருந்து புகை வருவதை பார்த்த பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக கீழே இறங்கியுள்ளனர்.

புகை வருவதை முதலில் பார்த்த பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு அறிவித்து பேருந்தை உடனடியாக நிறுத்தி அனைவரும் இறங்கி தப்பிக்க உதவி செய்துள்ளார். தீப்படித்த காவேரி டிராவல்ஸ் பஸ் முற்றிலும் எரிந்துள்ளது. தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி