ஆப்நகரம்

திருப்பதி அதிர்ச்சி; நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து!

லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர்.

Samayam Tamil 22 May 2019, 3:26 pm
தனியார் சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. திருப்பதி அருகே பூத்தலப்பட்டு நாயுடு பேட்டை நெடுஞ்சாலையில் வந்தது. இந்நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதனால் பேருந்தில் கதவை திறக்க முடியவில்லை. உடனே பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியேறினர்.

சிலர் உயரமாக இருந்த பேருந்தின் அடித்தளத்தில் இருந்து குதித்து தப்பித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பதி எம்.ஆர்.பள்ளி போலீசார் அங்கு விரைந்தனர்.

உடனே காயம் அடைந்தவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி