உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக 19 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும் போது போதிய சரீர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் நாட மாட்டார்கள் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கூட்ட நெரிசல் நிறைந்த பேருந்துகள், ஏசி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் வாகனங்கள் ஆகியவற்றின் பயன்பாடு பெரிதும் குறையும் என்று கூறுகின்றனர். ஏனெனில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் ஊரடங்கிற்கு பின்னரும் மக்களின் மனதில் நீடிக்கும்.
நெருக்கமான சூழலில் பயணித்தால் நமக்கும் வைரஸ் பாதிப்பு வந்துவிடுமோ, பிறர் பயன்படுத்திய இடங்களில் அமர்ந்தாலோ அல்லது தொட்டாலோ தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்படக் கூடும். இதன் காரணமாக மக்கள் தங்களது சொந்த வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்குவர். இதன்மூலம் பிறரிடம் இருந்து போதிய சரீர இடைவெளி மற்றும் நெருக்கமான சூழலை தவிர்த்து கொள்ள எண்ணுவர்.
பெங்களூரு மக்களுக்கு முக்கியச் செய்தி- இந்த 38 பகுதிகள் தான் கோவிட்-19 ஹாட்ஸ்பாட்!
மறுபுறம் கூட்ட நெரிசலின்றி பாதி இருக்கைகள் மட்டும் நிரம்பியவாறு பயணிக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நஷ்டத்தைச் சந்திக்கும். இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்க அரசின் மானியம் மற்றும் சிறப்பான திட்டமிடல் அவசியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி-ஐச் சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம்ஸ் பொறியியல் பிரிவின் இணை பேராசிரியர் ஆஷிஷ் வர்மா கூறுகையில், இந்திய நகரங்கள் பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்டவை.
மக்களின் தேவையை பொதுப் போக்குவரத்து சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இதனால் தங்கள் சொந்த வாகனங்கள் அல்லது தனியார் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதன்மூலம் அதிகப்படியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காற்று மற்றும் ஒலி மாசுபாடு உண்டாகிறது. இதுதான் தற்போதைய போக்குவரத்து முறையின் மிகப்பெரிய குறையாகும்.
குறிப்பாக பெங்களூரு நகரைப் பொறுத்தவரை ஆயிரம் பேருக்கு 1.2 பேருந்துகள் என வைத்துக் கொண்டால் 14,952 பேருந்துகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை தேவைப்படுகிறது. அப்படி பார்த்தால் பெங்களூரு நகரில் தற்போது 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை இருக்க வேண்டும். ஆனால் வெறும் 42 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே மெட்ரோ சேவை இருக்கிறது.
மேலும் 6,161 மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பான சேவையை அரசு அளிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து மீண்டு வரும் வரை ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் யுக்திகளை அரசு வகுக்க வேண்டும். கோவிட்-19 வைரஸ் முக்கியமாக ஒருவரின் சுவாச மண்டலத்தை தாக்குகிறது.
கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் கோவிட்-19 பலி 13ஆக அதிகரிப்பு!
எனவே நாம் காற்று மாசுபாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பெங்களூருவில் காற்று மாசடைய போக்குவரத்து மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தனியார் வாகனப் பயன்பாட்டை குறைத்து, பொதுப் போக்குவரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வினய் ஸ்ரீனிவாசா கூறுகையில், கோவிட்-19 பாதிப்பால் பெரும்பாலான மாநில போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அரசு தள்ளிப்போட வேண்டும். பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
வரும் நாட்களில் சரியான பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் போகக்கூடும். இதனை நம்பியிருக்கும் ஏழை மக்களின் நிலை பெரிதும் பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
இந்நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் நாட மாட்டார்கள் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கூட்ட நெரிசல் நிறைந்த பேருந்துகள், ஏசி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் வாகனங்கள் ஆகியவற்றின் பயன்பாடு பெரிதும் குறையும் என்று கூறுகின்றனர். ஏனெனில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் ஊரடங்கிற்கு பின்னரும் மக்களின் மனதில் நீடிக்கும்.
நெருக்கமான சூழலில் பயணித்தால் நமக்கும் வைரஸ் பாதிப்பு வந்துவிடுமோ, பிறர் பயன்படுத்திய இடங்களில் அமர்ந்தாலோ அல்லது தொட்டாலோ தொற்று ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்படக் கூடும். இதன் காரணமாக மக்கள் தங்களது சொந்த வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்குவர். இதன்மூலம் பிறரிடம் இருந்து போதிய சரீர இடைவெளி மற்றும் நெருக்கமான சூழலை தவிர்த்து கொள்ள எண்ணுவர்.
பெங்களூரு மக்களுக்கு முக்கியச் செய்தி- இந்த 38 பகுதிகள் தான் கோவிட்-19 ஹாட்ஸ்பாட்!
மறுபுறம் கூட்ட நெரிசலின்றி பாதி இருக்கைகள் மட்டும் நிரம்பியவாறு பயணிக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நஷ்டத்தைச் சந்திக்கும். இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்க அரசின் மானியம் மற்றும் சிறப்பான திட்டமிடல் அவசியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி-ஐச் சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம்ஸ் பொறியியல் பிரிவின் இணை பேராசிரியர் ஆஷிஷ் வர்மா கூறுகையில், இந்திய நகரங்கள் பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்டவை.
மக்களின் தேவையை பொதுப் போக்குவரத்து சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இதனால் தங்கள் சொந்த வாகனங்கள் அல்லது தனியார் வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதன்மூலம் அதிகப்படியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காற்று மற்றும் ஒலி மாசுபாடு உண்டாகிறது. இதுதான் தற்போதைய போக்குவரத்து முறையின் மிகப்பெரிய குறையாகும்.
குறிப்பாக பெங்களூரு நகரைப் பொறுத்தவரை ஆயிரம் பேருக்கு 1.2 பேருந்துகள் என வைத்துக் கொண்டால் 14,952 பேருந்துகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை தேவைப்படுகிறது. அப்படி பார்த்தால் பெங்களூரு நகரில் தற்போது 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ சேவை இருக்க வேண்டும். ஆனால் வெறும் 42 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே மெட்ரோ சேவை இருக்கிறது.
மேலும் 6,161 மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பான சேவையை அரசு அளிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து மீண்டு வரும் வரை ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் யுக்திகளை அரசு வகுக்க வேண்டும். கோவிட்-19 வைரஸ் முக்கியமாக ஒருவரின் சுவாச மண்டலத்தை தாக்குகிறது.
கொரோனா வைரஸ்: கர்நாடகாவில் கோவிட்-19 பலி 13ஆக அதிகரிப்பு!
எனவே நாம் காற்று மாசுபாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பெங்களூருவில் காற்று மாசடைய போக்குவரத்து மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தனியார் வாகனப் பயன்பாட்டை குறைத்து, பொதுப் போக்குவரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வினய் ஸ்ரீனிவாசா கூறுகையில், கோவிட்-19 பாதிப்பால் பெரும்பாலான மாநில போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அரசு தள்ளிப்போட வேண்டும். பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
வரும் நாட்களில் சரியான பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் போகக்கூடும். இதனை நம்பியிருக்கும் ஏழை மக்களின் நிலை பெரிதும் பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.