ஆப்நகரம்

ஹசீனாவை கட்டித் தழுவிய பிரியங்கா காந்தி: வைரலாகும் ட்வீட்!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை, நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி கட்டித் தழுவி தனது மரியாதையை வெளிப்படுத்தினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பிரியங்கா பதிவிட்டுள்ளார். இந்த படம் இப்போது வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 8 Oct 2019, 3:22 pm
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா வந்த ஹசீனா பிரதமர் நரேந்திர மோடியைக் கடந்த ஆக். 5ஆம் தேதி சந்தித்து, இந்தியா- வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. மேலும், இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவாதங்கள் நடத்தப்பட்டது.
Samayam Tamil priyanka_gandhi_2



இதன்பின், ஹசீனா காங்கிரஸ் தலைவர்களை, கடந்த 6ஆம் தேதி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இருந்தனர்.


இந்த சந்திப்பின்போது, ஹசீனா இருக்கும் அறைக்குள் வந்த பிரியங்கா காந்தி அவரை கட்டி தழுவி சில வார்த்தைகள் பேசுகிறார். பின் இந்த சந்திப்பு குறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.


அந்த ட்வீட்டர் பதிவில் “ஷேக் ஹசீனா ஜீயை சந்திக்கப் பல நாள் காத்திருந்தேன். பல்வேறு நெருக்கடி நிலைகளைத் தனது தைரியத்தால் கடந்து வந்தவர். எப்போதும் எனக்கு உத்வேகம் அளிக்கும் அவரை சந்தித்தபோது, அவரை அரவணைத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறியிருந்தார். இந்த பதிவோடு, ஹசினாவை கட்டித் தழுவிய புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பதியப்பட்டு 2 நாட்கள் கடந்துவிட்டது. எனினும் இப்போதும் வைரலாக நெட்டிசன்களால் பதிவிடப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி