ஆப்நகரம்

குடியுரிமை சட்ட மசோதா: போலீசார் அத்துமீறல், தர்ணாவில் இறங்கிய பிரியங்கா காந்தி...

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் உட்பட பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 16 Dec 2019, 8:13 pm
மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய, மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil குடியுரிமை சட்ட மசோதா: போலீசார் அத்துமீறல், தர்ணாவில் இறங்கிய பிரியங்கா காந்தி...


இந்த மசோதா சிறுபான்மையருக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதி என்ற அடிப்படையில் வட மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் சென்னை ஐஐடி மற்றும் மெட்ராஸ் பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நேற்று டெல்லி சராய் ஜூலேனா பகுதியில் நடத்த அமைதி போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலும் கலந்துகொண்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

மேலும் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தும் மாணவர்கள் தாக்கினர். இதையடுத்து சாலையில் இருந்த வாகனங்களுக்கு போலீசார் தீ பற்ற வைத்தது போன்ற காட்சிகளும் வலைத்தளங்களில் பரவின.

சிறுமியை சீரழித்த வழக்கு : பாஜக எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு!!

இந்த நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. அவர் ஜாமியாவில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதுகுறித்த அவர் பேசியதில் ' நேற்று ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும். யாருடைய அரசாங்கம் மாணவர்களை அடித்தது? இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து அவர் நிச்சயம் பேச வேண்டும். உன்னாவ் பாலியல் வழக்கில் அவரது கட்சி எம்.எல்.ஏ ஒரு குற்றவாளி ஆவார், பிரதமர் மோடி அதைப் பற்றி ஏன் பேசவில்லை என ஆவேசமாக பேசினார்.

'மானங்கெட்ட மத்திய அரசே'... குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்...

மத்திய அரசின் இந்த சட்டதிருத்தத்தை ஏற்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட போராட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று அமைதி ஊர்வலத்தை நடத்திய மம்தா பேனர்ஜி ' நான் உயிரோடு இருக்கும் வரை குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி