ஆப்நகரம்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றாா் பிரியங்கா

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Samayam Tamil 7 Feb 2019, 6:47 am
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Samayam Tamil Priyanka Gandhi


மக்களவைத் தோ்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த பிரதமரை தோ்வு செய்யும் இந்த முக்கிய தோ்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முயற்சியில் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் திடீரென தீவிர அரசியலில் இறங்கிய பிரியாங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து கடந்த 23ம் தேதி அக்கட்சி உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து அவா் நேற்று (புதன் கிழமை) கட்சியின் பொதுச் செயலளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மக்களவைத் தோ்தலில் வெற்றியை தீா்மானிக்கும் முக்கிய மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசம் மாநிலம் கிழக்குப் பகுதியை ராகுல் காந்திக்கு அக்கட்சி வழங்கி உள்ளது. இந்த பகுதியில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று முக்கிய கூட்டம் ஒன்றை நடத்துகிறாா். அந்த கூட்டத்தில் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி, மாநில பொறுப்பாளா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

அடுத்த செய்தி