ஆப்நகரம்

புதுச்சேரியில் 3 இடங்களில் கையும், களவுமாக பிடிபட்ட விபச்சாரக் கும்பல்!

புதுச்சேரி: மசாஜ் சென்டர், அழகு நிலையங்களில் செயல்பட்டு வந்த விபச்சாரக் கும்பல்கள் கைது செய்யப்பட்டன.

TIMESOFINDIA.COM 10 Oct 2018, 12:36 am
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் மற்றும் லாஸ்பேட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் வாடிக்கையாளர்கள் போல் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். அப்போது பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவது கண்டறியப்பட்டது.
Samayam Tamil arrest


உடனே அவர்களைக் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது 20, 30 வயதைச் சேர்ந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை வைத்து தொழில் செய்து வந்த முதலியார்பேட்டையைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திர குமார்(37), நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.விஜயன்(33), ஆர்லியன்பேட்டையைச் சேர்ந்த அமீர் ஜான்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய பிழைப்புத் தேடிச் சென்ற போது விபச்சாரக் கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். மீட்கப்பட்ட பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேபோல் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் ஜேபி ரெசிடன்சியில் நடந்த சோதனையில், குமாராட்சியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார்(47), மரக்காணத்தைச் சேர்ந்த கஜேந்திரன்(30), முதலியார்பேட்டையைச் சேர்ந்த தேவானந்த்(24), மூலக்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்றாவதாக அழகு நிலையம் மற்றும் மசாஜ் பார்லரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், புதுச்சேரியைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் நோணாங்குப்பத்தைச் சேர்ந்த முருகதாஸ்(40), ஷண்முகாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Prostitution rackets busted in Puducherry.

அடுத்த செய்தி