ஆப்நகரம்

ரயிலில் கட்டிபிடித்து கொஞ்சிய ஜோடிகளுக்கு தர்மஅடி!

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் இளம் ஜோடிகள் கட்டிபிடித்து அநாகரிகமாக நடந்து கொண்டதை பார்த்து முகம் சுளித்த பயணிகள் தர்ம அடிகொடுத்து ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.

Samayam Tamil 2 May 2018, 1:40 pm
கொல்கத்தா மெட்ரோ ரயிலில் இளம் ஜோடிகள் கட்டிபிடித்து அநாகரிகமாக நடந்து கொண்டதை பார்த்து முகம் சுளித்த பயணிகள் தர்ம அடிகொடுத்து ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர்.
Samayam Tamil Protests outside Kolkata Metro station after couple attacked for being too close


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், சாந்தினியிலிருந்து டம்டம் என்ற பகுதியை நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் இளம் ஜோடிகள், கட்டிபிடித்து கொண்டிருந்தனர். எல்லை மீறி அவர்கள் நடந்து கொண்ட விதம், பார்ப்பேர்களை முகம் சுளிக்க வைத்தது.

இதனால், சகபயணிகள் முதியோர்கள் முதலில் அந்த ஜோடிகளை எச்சரித்தனர். பின்னர், அந்த இளம்ஜோடிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், அவர்களை அடித்து தாக்கி ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர். இதையடுத்து ஜோடிகளை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, டம்டம் ரயில்நிலையத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி