ஆப்நகரம்

'உலகின் தொன்மையான மொழி தமிழ்' - பிரதமர் மோடி பெருமிதம்!

Pariksha Pe Charcha: "உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் பெருமை கொள்ள வேண்டும்," என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Authored byVelayuthan Murali | Samayam Tamil 28 Jan 2023, 3:56 pm
"உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்," என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
Samayam Tamil PM Modi - Students
பிரதமர் மோடி (கோப்பு படம்)


கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மன அழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையாகவும் சுவராஸ்யமாகவும் பதிலளித்தார். மேலும் மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு டக் டக் என்று பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி அசத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகவும் பழமையான மொழி எந்த நாட்டில் உள்ளதோ அந்த நாடு அதற்கு பெருமை கொள்ள வேண்டுமா? இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி உலகத்திடம் உலகின் மிக தொன்மையான மொழி எனது நாட்டில் உள்ளது என கூற வேண்டுமா? இல்லை? இது குறித்து உங்களுக்கு தெரியுமா என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அதற்கான பதிலை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நமது தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழியாகும். இவ்வளவு பெரிய கௌரவம் நமது நாட்டில் உள்ளது. இதனை நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டுமல்லவா? என மாணவர்களை பார்த்து கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் கடந்த முறை UNOவில் பேசினேன். அப்போது நான் தமிழை கற்று கொண்டு பேசினேன். ஏனெனில் நான் உலகத்திற்கு கூற விரும்பினேன். எனக்கு பெருமையாக உள்ளது. உலகின் மிக பழமையான தமிழ் மொழி, தொன்மையான தமிழ் மொழி எனது நாட்டில் உள்ளது என்பதில் எனக்கு பெருமை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் 38 லட்சம் பேர் பங்கேற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 லட்சம் அதிகம் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Velayuthan Murali
நான் மு.வேலாயுதன். MBA பட்டதாரி. பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட நான், 17வது வயதில், அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் 5 ஆண்டுகள் கடந்த பயணம், என்னை, காட்சி ஊடகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 2 ஆண்டுகள் தொடர்ந்த பயணம், என்னை, டிஜிட்டல் ஊடகத்திற்கு அழைத்து வந்தது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான நடப்பு செய்திகளை எழுதி வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் சமரசம் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி