ஆப்நகரம்

பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ்வதற்காக விவகாரத்து கோரும் குடும்பத் தலைவி

பப்ஜி போதையால் கணவன், குழந்தையை விட்டு பிரிய விவகாரத்து கேட் குடும்பத் தலைவி ஒருவர் தொண்டு நிறுவனத்தை அணுகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 May 2019, 11:16 am
பப்ஜி பார்டனருடன் இணைந்து வாழ விரும்புவதாகவும், அதற்காக தனக்கு விவகாரத்து வேண்டும் என்று 19 வயதான பெண் ஒருவர் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பப்ஜி போதையால் கணவன், குழந்தையை விட்டு பிரிய விவகாரத்து கேட்கும் குடும்பத் தலைவி
பப்ஜி போதையால் கணவன், குழந்தையை விட்டு பிரிய விவகாரத்து கேட்கும் குடும்பத் தலைவி


இளைய சமுதாயத்தினரிடையே ஆன்லைன் மொபைல் விளையாட்டான பப்ஜி மிகவும் பிரபலம். இதுவரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்தது இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், நடுத்தர ஆண்கள் மட்டுமே.

ஆனால் முதன்முதலாக பப்ஜி விளையாடி, விளையாடி அதற்கு அடிமையானதோடு மட்டுமில்லாமல், பப்ஜி பார்டனரோடு சேர்ந்து வாழ வேண்டும், அதற்கு விவகாரத்து வேண்டும் என குஜராத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தொண்டு நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளார்.

பப்ஜி விளையாட்டிலிருந்து தங்களது பிள்ளைகளை மீட்க வேண்டும் என்று தாய்மார்கள் தான் இதுவரை குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். ஆனால் இந்த பெண்ணின் கோரிக்கை சற்று பதற்றமடையச் செய்யவே உடனே அவரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது அந்த தொண்டு நிறுவனம்.

விவகாரத்து கோரிய பெண் தொடர்பாக அவருடைய பெற்றோர்கள், புகுந்த வீட்டார் மற்றும் கணவனிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 18 வயது பூர்த்தியானவுடன் அந்த பெண்ணுக்கும், கட்டுமான தொழில் செய்து வரும் ஒருவருக்கும் திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தம்பதிக்கு 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பேறு அடைந்து அதற்காக ஓய்வு எடுத்து வந்த சூழலில் பப்ஜி விளையாட தொடங்கியுள்ளார் அந்த பெண். ஆரம்பத்தில்ல் பொழுதுபோக்காக இருந்த பிறகு வாடிக்கையாகி மாறிவிட்டது.

அந்த நேரத்தில் அதே நகரில் வசித்து வரும் ஒரு ஆண் நண்பர் பப்ஜி விளையாட்டில் அறிமுகமாகியுள்ளார். அவருடன் நட்பு ஏற்பட, பப்ஜியில் தொடங்கிய பழக்கம் சேட்டிங், போனில் பேசுவது என அடுத்தக்கடத்திற்கு சென்றது.

இதுதொடர்பாக தொண்டு நிறுவனத்தார் பெண்ணிடம் பேசுகையில், குடும்பத்தார் யாரும் தன்னை கொடுமைப்படுத்தவில்லை. எல்லோரும் அன்புடன் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் அந்த ஆண் நண்பருடன் சேர்ந்த வாழ ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

விபரீதத்தை உணர்ந்து கொண்ட தொண்டு நிறுவனத்தார், பாதிக்கப்பட்ட பெண்ணை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சில பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். தவிர, கணவருடன் விவாகரத்து பெற்று குடும்பத்தாரை விட்டு பிரிவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும், பப்ஜி விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு உளவியல் சார்ந்த சிகிச்சைகள் வழங்கப்படவும் குடும்பத்தினர் முயற்சிகளை தொடங்கியுள்ளனர். நாட்டில் முதன்முதலாக பெண் ஒருவர் பப்ஜி விளையாட்டு அடிமையாகி கணவன் மற்றும் குழந்தையை பிரிவதற்காக தொண்டு நிறுவனத்தை அணுகிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி