ஆப்நகரம்

பப்ஜி கேம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஷாக்; அவ்வளவு தான் முடிஞ்சுது போங்க!

இந்தியாவில் பப்ஜி சேவை தொடர்பான அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுகிறது.

Samayam Tamil 30 Oct 2020, 10:39 am
இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக சில மொபைல் அப்ளிகேஷன்களை மத்திய அரசு ரத்து செய்தது. அதில் சீனாவின் அப்ளிகேஷன்கள் ஏராளம் அடங்கும். இரண்டு கட்டமாக ரத்து செய்யப்பட்ட 117 அப்ளிகேஷன்கள் கொண்ட பட்டியலில் பப்ஜியும் இடம்பெற்றிருந்தது. இது தென்கொரிய வீடியோ கேம் நிறுவனமான ப்ளூஹோல்-க்கு சொந்தமானது. இதற்கான பதிப்புரிமை சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்திய - சீன எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில் சீனாவின் மொபைல் ஆப்கள் ரத்து செய்யப்பட்டு வருவதும் அடங்கும்.
Samayam Tamil PUBG Ban in India


அந்த வகையில் சீன நிறுவனத்துடனான தொடர்பால் பப்ஜிக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் தனது அதிகாரப்பூவ பேஸ்புக் பக்கத்தில், பப்ஜியின் அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு. மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவுப்படி, பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் ஆகிய சேவைகள் இன்று (அக்டோபர் 30) முதல் முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.

இதனை இந்திய பயனாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது. இந்திய கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாது. ஏற்கனவே டவுன்லோடு செய்து வைத்திருப்பவர்களுக்கும் செயல்படாது. இந்தியாவில் உள்ள பப்ஜி சர்வர்களும் முடக்கப்படுகின்றன.

26 ஆண்டுகளில் இல்லாத ஷாக்; தாக்குப் பிடிக்குமா டெல்லி?

தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் முதன்மையான நோக்கம். எனவே இந்தியாவின் தகவல் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உடன்பட்டு நடக்க விரும்புகிறோம். எங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதற்கு மிகவும் வருந்துகிறோம்.

இந்தியாவின் பப்ஜி மொபைல் ஆப்பிற்கு அளித்து வந்த ஆதரவிற்கு மிக்க நன்றி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் பப்ஜி விளையாட்டின் பிசி வெர்ஷனுக்கு தடை விதிக்கப்படவில்லை. இதன் முழு உரிமையும் தென் கொரியாவின் ப்ளூஹோல் நிறுவனத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி