ஆப்நகரம்

Puducherry: அப்புறம் என்ன? பீச்,பார்க்கை திறந்துவிட்ட புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 8:01 am
புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பாரதி பூங்கா ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil Pondicherry beach


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள்1.0 என்ற பெயரில் ஜூன் 30-ம் தேதி வரை அதிகமான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
எனினும், அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பதே இறுதியானது என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சில தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது;

* ஜூன் 8-ம் தேதி முதல் வணிகவளாகங்கள் இயங்கலாம்

* ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி

* ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்

* புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; தொடங்கியது சேவை - அதுவும் இத்தனை ரயில்கள்!

* மத்திய அரசு வழிகாட்டுதலுடன் மதவழிபாட்டு தளங்கள் ஜூன் 8-ம் தேதி முதல் திறக்கப்படும்

* புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், பார்சல், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது. ஆகிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு திறக்க அனுமதி அளித்தும் தமிழ்நாட்டில் மத வழிபாட்டு கூட்டங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி