ஆப்நகரம்

லட்டு வழங்கி புத்தாண்டு வாழ்த்து கூறிய புதுச்சேரி முதல்வர்!

புதுச்சேரி: விநாயகரை வழிபட்டு, லட்டு வழங்கி புதுச்சேரி முதல்வர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Jan 2019, 4:50 pm
2018ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2019ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதனை உலகம் முழுவதும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil Narayanasamy-puducherry


இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அங்கு பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

இதையடுத்து அங்குள்ளவர்களுக்கு லட்டு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலம் 2019ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால், புதுச்சேரி மாநிலம் வளமாக மாறுதல் அடையும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி