ஆப்நகரம்

இல்லாத பிரச்னைகளை பெரிதாக்குகிறார் நாராயணசாமி- கிரண்பேடி

இல்லாத பிரச்னைகளை எழுப்பி, கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குள் புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 14 Feb 2019, 4:52 pm
இல்லாத பிரச்னைகளை எழுப்பி, கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குள் புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil kiranbedi2


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிரண்பேடி செய்தியாளர்களிடம் பேசினார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இல்லாத பல பிரச்னைகளை எழுப்பி தமக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே நாராயணசாமி தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்றும், ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்த இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நினைக்கிறார்? என்றும் கிரண்பேடி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு புதிய திட்டங்கள் கொண்டு வரும்போதெல்லாம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி