ஆப்நகரம்

புதுச்சேரி மீனவர்கள் மீட்ட ராக்கெட் மோட்டாரின் ஆபத்தான பொருள் மாயம்!!

புதுச்சேரியில் மீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட் மோட்டாருக்கான பாகத்தில் இருந்த வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயமாகி உள்ளது. இதுகுறித்து, இஸ்ரோ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 3 Dec 2019, 2:42 pm
புதுச்சேரியில் மீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட் மோட்டாருக்கான பாகத்தில் இருந்த வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயமாகி உள்ளது. இதுகுறித்து, இஸ்ரோ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil puducherry fishermen pulled ashore a propellant motor part of pslv booster
புதுச்சேரி மீனவர்கள் மீட்ட ராக்கெட் மோட்டாரின் ஆபத்தான பொருள் மாயம்!!


பிஎஸ்எல்வி ராக்கெட்

புதுச்சேரியில் வம்பா கீரப்பாளையம் கடற்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது அவர்களது வலையில் ராட்சத பொருள் ஒன்று கிடைத்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட் பூஸ்டர் மோட்டார்

வலையில் கிடைத்த பொருள் விண்ணுக்கு செயற்கைக்கோளை எடுத்துச் செல்லும் பிஎஸ்எல்வி ராக்கெட் பூஸ்டரின் மோட்டாரின் பாகம் என்பது தெரிய வந்தது. இதன் எடை 1, 600 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதை மீனவர்கள் அனைவரும் சேர்ந்து கரைக்கு இழுத்து வந்தனர். தகவல் அறிந்த காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்கள் என அந்த இடத்திற்கு வந்தனர்.

இஸ்ரோ அதிகாரிகள் வருகை

இதையடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து வந்த 4 பேர் கொண்ட ஆய்வுக் குழுவினர் அது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் ஒரு பாகம்தான் என்பதை உறுதிபடுத்தினர்.

வெடிக்கும் பொருள் மாயம்

ராக்கெட்டின் ஒரு பாகத்தில் இருந்து வெடிக்கும் பொருளை அதிகாரிகள் அகற்றினர். மற்றொரு பாகத்தில் இருந்து அகற்றுவதற்கு தேடியபோது அந்தப் பொருள் இல்லை. வெடிக்கும் தன்மை கொண்ட பொருளாக அது இருப்பதால் எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்குமாறு ஆய்வுக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மீனவர்கள் எதிர்ப்பு

இதையடுத்து ராக்கெட்டை எடுத்துச் செல்ல இஸ்ரோ அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், தங்களது படகு மற்றும் வலைகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கொடுத்து விட்டு எடுத்துச் செல்லுமாறு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராக்கெட் பாகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இஸ்ரோ ஆய்வு

எப்போது இந்த ராக்கெட் கடலுக்குள் விழுந்தது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

துருப்பிடித்த ராக்கெட்

ராக்கெட் பாகம் துருப்பிடித்து காணப்படுகிறது. தொடர்ந்து பிஎஸ்எல்சி ராக்கெட் பாகத்தை பார்ப்பதற்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

Video-ராக்கெட்டை பிடித்து வந்த மீனவர்!

அடுத்த செய்தி