ஆப்நகரம்

புதுச்சேரி: ஆளுநர் அலுவலகத்தையும் விட்டு வைக்காத கொரோனா... 2 நாட்களுக்கு மூடல்

துச்சேரி ஆளுநர் அலுவலகமான ராஜ்நிவாஸ் அடுத்த 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது.

Samayam Tamil 8 Jul 2020, 2:17 pm
புதுச்சேரி ஆளுநர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆளுநர் அலுவலகம் மூடப்பட உள்ளது.
Samayam Tamil Raj Niwas


நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூடாத போதும் சில அலுவலகங்களில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுவதையடுத்து அலுவலகங்கள் பூட்டப்பட்டு வந்தன. கல்லூரிகள், வங்கிகள், காவல்நிலையங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில், புதுச்சேரியில் ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி ஆளுநர் அலுவலகமான ராஜ்நிவாஸ் அடுத்த 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. ராஜ் நிவாஸ் வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டிய பணிகள் இருப்பதால் அதற்காக மட்டும் இந்த இரண்டு நாட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணிகள் முடிந்தபிறகு மீண்டும் பணிகள் தொடரும் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி