ஆப்நகரம்

கொரோனாவை விரட்ட இப்படியொரு ஆச்சரியம் நிகழ்த்திய புதுச்சேரி!

தங்கள் மாநிலத்தில் கொரோனாவை விரட்ட பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது.

Samayam Tamil 30 Oct 2020, 7:01 am
புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது. புதிதாக 181 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தற்போது 3,720 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் கொரோனா பரவலின் விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 592ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil Corona in Puducherry


அதில் புதுச்சேரியில் 488, காரைக்காலில் 55, யாணத்தில் 42, மாஹேவில் 7 பேர் அடங்குவர். உயிரிழப்பு விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம் என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. குறிப்பாக யாணம் பகுதியில் பலி விகிதம் 2.1 சதவீதம் என்ற உச்சத்தில் இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 34,761 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 30,448 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 87.6 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் வீடுகளில் 2,123 பேரும், பல்வேறு நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்களில் 1,597 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி முதலில் இவங்களுக்குத்தான்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-4

இதேபோல் காரைக்காலில் வீடுகளில் 164 பேரும், மையங்களில் 56 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். யாணம் பகுதியில் வீடுகளில் 53 பேரும், சிகிச்சை மையங்களில் 71 பேரும், மாஹேவில் வீடுகளில் 45 பேரும், மையங்களில் 89 பேரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2.62 லட்சம் பேருக்கு நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளன.

அடுத்த செய்தி