ஆப்நகரம்

பாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியில் இரு மாதங்களுக்குப் பிறகு இன்று மது பானக் கடைகள் திறக்கப்படுகின்றன.

Samayam Tamil 25 May 2020, 9:14 am
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக புதுச்சேரியில் மார்ச் 23ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
Samayam Tamil puducherry liquor shops


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மது விற்பனை தொடங்கப்பட்ட பின்னர் புதுச்சேரி அரசும் விற்பனையைத் தொடங்க திட்டமிட்ட நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மது பானங்களின் விலை குறைவாக இருக்கும் என்பதால் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு மது பானங்களை கடத்தும் சம்பவம் அவ்வப்போது நடைபெறும். ஆனால் தமிழ்நாட்டில் கடைகள் திறக்கப்பட்டு, புதுச்சேரியில் தொடங்காமல் இருந்ததால் தமிழ்நாட்டிலிருந்து, புதுச்சேரிக்கு சில இடங்களில் மது பானங்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்யப் போகிறது சென்னை?

பொது முடக்க காலத்தில் கள்ளத் தனமாக புதுச்சேரியில் சில இடங்களில் மது விற்பனை நடந்ததால் அனைத்து கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கடைகள் மீண்டும் திறக்கப்படுவதால் காலை 7 மணி முதல் அதிகாரிகள் சீல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடை காலை 7 மணி முதல் 10 மணி வரை இயங்கும், பார்கள் இயங்க தடை தொடரும் என்றும், கிருமி நாசினி கொண்டு கடை அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நபர் ஒருவருக்கு 4 அரை லிட்டர் பாட்டில்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

மேலும் புதுச்சேரியில் மது பானங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வுப் பட்டியல் ஒவ்வொரு கடை முன்பும் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு - புதுச்சேரியில் கிடைக்கும் 165 வகையான மது பானங்களுக்கு 100 சதவீதம் விலை உயர்வும், புதுச்சேரியில் மட்டும் கிடைக்கும் மது பானங்களுக்கு 25 சதவீதம் விலை உயர்வும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு சாராயக் கடைகளில் 20 சதவீதம் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கள்ளுக் கடைகளில் விலை உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி