ஆப்நகரம்

அதிகாலையில் பால் வாங்கச் சென்ற பெண் கழுத்தறுத்து கொலை..!

புதுச்சேரியில் அதிகாலையில் பால் வாங்கச் சென்ற பெண், கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Mar 2019, 10:56 pm
புதுச்சேரியில், அடையாளம் தெரியாத இருவர், 27 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் பெயர் ஆர். கங்கா என்றும், அவர் பூச்சு வேலை செய்து வரும் ராஜசேகர் என்பவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil பால் வாங்கச் சென்ற பெண், பிணமான கொடூரம்


மதுக்கரையைச் சேர்ந்த கங்கா, கணவர் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த போது காலை 5 மணியளவில் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். பால் வாங்கிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, இரண்டு பேர் வந்து அணுகியுள்ளனர்.

அப்போது மூவருக்கும் இடையில் உரையாடல் ஏற்படுத்துள்ளது. அப்போது அந்த இரண்டு பேரும் கூர்மையான ஆயுதங்களை வைத்து கங்காவின் கழுத்தை அறுத்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்ற ஒருவர், ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு காவலர்கள் வந்து பார்த்த போது, கங்கா இறந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து உடலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவாகரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் கங்கா காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இருவருக்குமிடையில் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. மேலும், இருவரும் மணமுறிவு செய்து கொள்ளவும் தம்பதிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

அடுத்த செய்தி