ஆப்நகரம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி!

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதி கிடைக்க உள்ளது.

Samayam Tamil 8 Mar 2019, 3:43 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி, பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
Samayam Tamil CRPF


இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன. புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1.01கோடி நிதி கிடைக்க உள்ளது.

அதாவது, ராணுவவீரர்கள் உயிரிழந்தால் ரூ.35லட்சம் அவர்களது குடும்பத்துக்கு தரப்படும். இதனுடன் பணிக்கான தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.1.01 கோடி நிதி அளிக்கப்பட உள்ளது.

அடுத்த செய்தி