ஆப்நகரம்

இண்டிகோ விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு: இந்தூரில் அவசர தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து சென்ற இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக இந்தூரில் தரையிறக்கப்பட்டது.

Samayam Tamil 8 Jul 2018, 4:18 pm
டெல்லியிலிருந்து சென்ற இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக இந்தூரில் தரையிறக்கப்பட்டது.
Samayam Tamil indigo


டெல்லியிலிருந்து புனேவுக்கு 6E769 என்ற இண்டிகோ விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில், 52 வயது நிரம்பிய பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 9.30 மணியளவில் விமானம் அவசரமாக இந்தூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, பயணி இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவர் நலமாக இருப்பதாக, ஹோல்கர் விமான நிலையத்தின் இயக்குனர் ஆர்யமா சன்யால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி