ஆப்நகரம்

தண்ணீர் தேங்கும் பிரச்சனை; வீட்டை 3.5 அடி வரை உயர்த்திய புனே தொழிலதிபர்!

350 டன் எடையுள்ள தனது வீட்டை, தொழிலதிபர் ஒருவர் 3.5 அடி வரை உயர்த்தியுள்ளார்.

Samayam Tamil 15 Jul 2018, 3:46 pm
புனே: 350 டன் எடையுள்ள தனது வீட்டை, தொழிலதிபர் ஒருவர் 3.5 அடி வரை உயர்த்தியுள்ளார்.
Samayam Tamil Lifting Tech


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கோர்பாடி பிடி கவடே சாலையில் தர்தத்தா காலணியில் வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீடு அப்பகுதியில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் இதன் உரிமையாளர் ஷிவ் குமார்(40), தனது வீட்டை 3.5 அடி வரை உயர்த்தியுள்ளார்.

பருவமழை காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுவதால், ஷிவ் குமாரின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அதற்கு காரணம், ஒவ்வொரு முறை சாலை பராமரிப்பு செய்யப்படும் போதும், இவரது வீடு கீழ்நோக்கி சென்று விடுகிறது.

எனவே 2,200 சதுர அடி கொண்ட தனது வீட்டை, உயர்த்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலே கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக ஹரியானாவைச் சேர்ந்த சிசோடியா அண்ட் சன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த வீடு கடந்த 2005ல் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூன் முதல் வாரத்தில் வேலை தொடங்கியது. 11 பேர் சேர்ந்து, 12 மணி நேரம் வேலை செய்தனர். 200 ஜாக்குகள் கொண்டு 3.5 அடி வரை வீடு உயர்த்தப்பட்டது. 350 டன் எடை கொண்ட வீட்டை உயர்த்த, ஷிவ் குமார் ரூ.15 லட்சம் அளித்துள்ளார்.

இந்தத் தொகை தொழிலாளர் கூலி மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்படாதது. சிசோடியா அண்ட் சன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 3,500 வீடுகளை உயர்த்தியுள்ளனர். ஒரு சதுர அடிக்கு ரூ.250க்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

Pune businessman ‘lifts’ his house to 3.5 ft height.

அடுத்த செய்தி