ஆப்நகரம்

அரசு பள்ளியில் மதிய உணவுக்கு பதிலாக மாட்டு தீவனம்..!

மஹாராஷ்டிராவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவுக்கு பதிலாக மாட்டு தீவனம் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Mar 2021, 6:01 pm
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகர பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கார்பரேஷனுக்கு கீழ் இயங்கி வந்தாலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் மாநில அரசிடம் இருந்து பெறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் மதிய உணவு திட்டம் தடைப்பட்டு பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
Samayam Tamil cattle feed


அதாவது, பள்ளிகள் மூடப்பட்டாலும் அனைத்து மாநிலங்களிலும் மதிய உணவு திட்டத்தை தொடர வேண்டும் என உத்தரவிட்டது. அதனையடுத்து, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொது அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில், சமைத்த உணவுக்கு பதிலாக தகுதியான மாணவர்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவுதலுக்கு பிறகு மகாராஷ்டிரா அரசு இந்த செயல்முறையை மையப்படுத்த முடிவுசெய்தது. மேலும் ,மாவட்ட வாரியாக மதிய உணவுக்கான டெண்டரை நடத்தக்கூடாது என்று 19 மாவட்டங்களில் உள்ள 7,549 பள்ளிகளில் 245 கோடி ரூபாய்க்கு தகுதியான பள்ளி குழந்தைகளுக்கு உணவு தானிய வடிவத்தில் மதிய உணவை வழங்க ஏலங்களை அழைக்கும் டெண்டர் அறிவிப்பை அரசு வெளியிட்டது.


திருப்பதி இடைத்தேர்தல்; முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வியூகம் எடுபடுமா?

இந்நிலையில், புனேவில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவுக்கு பதிலாக, கால்நடை தீவனம் அனுப்பப்பட்டிருந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள புனே மேயர் முர்லிதர் மோஹல், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி