ஆப்நகரம்

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இனி போதை மருந்து சோதனை; மாநில அரசு அதிரடி!

அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து சோதனை நடத்துவது கட்டாயம் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2018, 5:31 am
சண்டிகர்: அரசு ஊழியர்களுக்கு போதை மருந்து சோதனை நடத்துவது கட்டாயம் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Punjab CM


இதுதொடர்பாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்திர் சிங், தலைமைச் செயலாளருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதனுடன் சேர்த்து இனி போதை மருந்து சோதனையும் நடத்தப்படும். இது வேலைக்கான ஆட்கள் தேர்வு, பதவி உயர்வு ஆகியவற்றிற்கு, ஊழியர்களின் படிநிலைகளுக்கு ஏற்ப நடைபெறும். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கும் விதிவிலக்கல்ல.

பஞ்சாப் மாநிலத்தில் முற்றிலும் போதைப் பொருள் சந்தையை அகற்றும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக போதை மருந்து கடத்தல்காரர்கள், வியாபாரிகளுக்கு முதலமைச்சர் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது அமைச்சரவையுடன் கலந்து ஆலோசித்து, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் போதை மருந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Punjab CM Amarinder Singh orders mandatory dope test of all govt emloyees.

அடுத்த செய்தி