ஆப்நகரம்

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றால் தேசிய அளவில் பாஜக.,வுக்கு மாற்றாக வளர வாய்ப்பு

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், கருத்துக் கணிப்புகள் கூறுவதைப் போல, ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும் பட்சத்தில், தேசிய அளவில் பாஜக.,வுக்கு மாற்றாக வளர வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 10 Mar 2017, 7:54 pm
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், கருத்துக் கணிப்புகள் கூறுவதைப் போல, ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும் பட்சத்தில், தேசிய அளவில் பாஜக.,வுக்கு மாற்றாக வளர வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil punjab election result 2017 aaps victory will make them a national alternative to bjp
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றால் தேசிய அளவில் பாஜக.,வுக்கு மாற்றாக வளர வாய்ப்பு


நேற்று மாலை, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தொடர்பான, எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. அதில், பஞ்சாப் மாநிலத்தில் சிவோட்டர் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டது.

அக்கட்சி, 59 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து, 67 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கட்சி, 41 முதல் 49 இடங்கள் வரையும் வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாஜக, ஷிரோன்மணி அகாலிதளம் கூட்டணி, வெறும் 5 முதல் 13 சீட்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் குறிப்பிடப்பட்டது. பாஜக.,வைவிட ஆம் ஆத்மியின் செல்வாக்கு, பஞ்சாப் மாநிலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், அக்கட்சி தேசிய அளவில் பெரும் கட்சியாக வளர வாய்ப்புள்ளதாக, தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லியில் ஏற்கனவே, ஆம் ஆத்மி ஆளுங்கட்சியாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் இது நடக்கும் எனில், தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு உயரும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இந்தியா முழுவதும் ஆம் ஆத்மிக்கு என, கணிசமான செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. இது ஓட்டு வங்கியாக மாறுமா என்பது பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உள்ளது.

கருத்துக் கணிப்புகள் சொல்வதைப் போல, ஆம் ஆத்மி வெற்றிபெறும்பட்சத்தில், தேசிய அளவில் பாஜக.,வுக்கு மாற்றாக, ஆம் ஆத்மி வளர்ச்சியடையும் வாய்ப்புகள் மிக அதிகம். பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட காரணங்களால், நாடு முழுவதும் நடுத்தர மக்களிடையே பாஜக.,வுக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. இதுவே, ஆம் ஆத்மியின் செல்வாக்கு உயர முதன்மை காரணமாக இருக்கும் என்றும், அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

If Aam Admi Party (AAP) manages to snare Punjab — as anecdotal evidences and poll projections seem to suggest— there will be two likely, immediate outcomes.

அடுத்த செய்தி