ஆப்நகரம்

மீண்டும் ஊரடங்கு அமல்: கொரோனா பாதிப்பால் கட்டுப்பாடு!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Nov 2020, 11:01 pm

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சில மாதங்களிலேயே ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது.
Samayam Tamil ஊரடங்கு


இந்நிலையில், அண்மையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாவதால் குறிப்பிட்ட சில மாநிலங்கள் இரவு ஊரடங்கு மட்டும் அமல்படுத்தியுள்ளன. இந்த வரிசையில், தற்போது, பஞ்சாப் அரசும் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் பஞ்சாபில் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிவதாக முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

ஏழுமலையானுக்கே டஃப் கொடுக்கும் நிவர் புயல்; திருமலையில் பக்தர்கள் அவதி!

மாஸ்க் அணியாவிட்டாலும், தனிநபர் இடைவெளி விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டாலும் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். ஏற்கெனவே 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதியன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அமகதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா ஆகிய பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு உயர்வின் விளைவாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி