ஆப்நகரம்

பள்ளிக் குழந்தைகளை கடித்த வெறிநாய்.. ஆத்திரத்தில் நாயை கொன்ற பொதுமக்கள்!

குழந்தைகளை கடித்த வெறிநாயை ஆத்திரத்தில் கொலை செய்த பொதுமக்கள்.

Samayam Tamil 4 Dec 2021, 7:05 pm
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வெறிப்பிடித்த நாய் 10 பள்ளிக் குழந்தைகளை கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Rabid dog


உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் இன்று காலையில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 10 குழந்தைகளை வெறிநாய் கடித்துள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜஹான்பூர் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரேபிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வெறிப்பிடித்த நாய் கடித்த 10 குழந்தைகளில் சாதிக் (4), மஹாக் (4), இன்ஷா (10), ஷ்யாம் (7) ஆகிய நான்கு குழந்தைகள் உடனடியாக அரசு சுகாதார மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

மாயமான மதுபானங்கள் - பெண் போலீஸ் மீது வழக்கு பதிவு!
இதுமட்டுமல்லாமல், குழந்தைகளை நாய் கடித்ததால் ஆத்திரமடைந்த கிராமவாசிகள் அந்த நாயை கொன்றுவிட்டனர். இச்சம்பவம் ஜகான்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி