ஆப்நகரம்

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கு- இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.

Samayam Tamil 10 Oct 2018, 9:58 am
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டி, உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ள பொதுநலன் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
Samayam Tamil rafale647_660_052217090801_081018102013
ரஃபேல் விமான ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ’டாச்ல்ட்’ என்ற நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த விமானங்களை பரமாரிக்கும் பணிகளை அரசுக்கு சொந்தமான ஹெ.ஐ.எல் நிறுவனத்துக்கு வழங்காமல், ரிலையன்ஸ் குழுமத்துக்கு வழங்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டி வழக்கறிஞர்கள் எம்.எல். சர்மா, வினீத் தாண்டா, காங்கிரஸ் கட்சியின் தெஹ்சீன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

அடுத்த செய்தி