ஆப்நகரம்

ரபேல் தொடா்பான அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சரியானதே – உச்சநீதிமன்றம்

ரபேல் விமான ஒப்பந்தம் தொடா்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோாிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 11:26 am
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சரியான வகையில் தான் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Rafale


இந்திய ராணுவத்திற்கு தேவையான அதிநவீன போா் விமானங்களான ரபேல் போா் விமானங்களை டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. முன்னதாக 126 விமானங்கள் வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் நாளடைவில் இது 36 விமானங்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ரபேல் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தம் தொடா்பான அரசின் நடவடிக்கைகளை தெளிவாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கு தொடா்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமா்வு வழங்கிய தீா்ப்பில், ரபேல் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு சரியானதே. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அதிகாரம் கிடையாது. உரிய வழிமுறைகளை பின்பற்றிய பின்னரே ரபேல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


எனவே ரபேல் ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தொிவித்த நீதிபதிகள் ஒப்பந்தம் தொடா்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனா்.

அடுத்த செய்தி