ஆப்நகரம்

7 பேர் விடுதலை விவகாரம்: ராகுல் கருத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 3 Mar 2016, 11:53 am
புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahul comments on release of 7 members in connection with rajiv murder case
7 பேர் விடுதலை விவகாரம்: ராகுல் கருத்து


ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்ய, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இவ் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு பற்றி உடனே தெரிவிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர கோரி நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் கூறியதாவது: 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். ஒரு மகனாக நான் என்ன நினைக்கிறேன் என்பதை கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி