ஆப்நகரம்

இந்திய விவசாயிகளை விட பிரான்ஸ் நைட் கிளப்புகள் மீதே ராகுலுக்கு ஆர்வம்; சுவாமி தாக்கு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, இந்திய விவசாயிகளை பற்றி எதுவும் தெரியாது என்றும், அவருக்குத் தெரிந்ததெல்லாம் பிரான்சில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதிகள்தான் என்றும் பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

TNN 7 Sep 2016, 10:29 am
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, இந்திய விவசாயிகளை பற்றி எதுவும் தெரியாது என்றும், அவருக்குத் தெரிந்ததெல்லாம் பிரான்சில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதிகள்தான் என்றும் பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahul doesnt know indian farmers he knew only french night clubs swamy attacks
இந்திய விவசாயிகளை விட பிரான்ஸ் நைட் கிளப்புகள் மீதே ராகுலுக்கு ஆர்வம்; சுவாமி தாக்கு


இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

விவசாயிகள் நலனுக்காக கிசான் யாத்திரை செல்லும் ராகுல் காந்திக்கு விவசாயிகளைப் பற்றி எதுவும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பிரான்சில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதிகள்தான். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா உள்ளிட்டோர் விரைவில் சிறைக்கு செல்வார்கள்.

இதேபோன்று, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் விரைவில் சிறை செல்வர். ஜம்மு காஷ்மீரில் செயல்படும் ஹூரியத் தலைவர்கள் அனைவரும் தேச விரோதிகள். அவர்களை சிறையில் அடைக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அடுத்த செய்தி