ஆப்நகரம்

சர்ச்சைக்குரிய கருத்து குறித்து ராகுல் விளக்கம்

சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக் குள்ளானதையடுத்து தனது பேச்சு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

TNN 8 Oct 2016, 11:51 am
புதுதில்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக் குள்ளானதையடுத்து தனது பேச்சு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil rahul explains about his controversial speech
சர்ச்சைக்குரிய கருத்து குறித்து ராகுல் விளக்கம்


உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களை சந்திக்கும் யாத்திரையை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் நடத்தினார். அந்த யாத்திரையின் முடிவில் தில்லி சன்சாத் மார்க்கில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய ராகுல், விவசாயிகள், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பணியாற்ற வேண்டும். அதை விடுத்து தேவையில்லாத அரசியலில் அவர் ஈடுபடக் கூாடது. ராணுவ வீரர்கள் இந்த தேசத்திற்காக தங்களது ரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆனால், அவர்கள் சிந்திய ரத்தத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க மோடி முயற்சி செய்கிறார். வீரர்கள் அவர்கள் பணியை செய்து விட்டனர். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். விவசாயிகளுக்கு உதவுங்கள். ராணுவ வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுங்கள். அதுதான் உங்களது கடமையாகும். அதற்காகதான் மக்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார்.

இதற்கு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனது பேச்சு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் நாடு முழுவதும் அரசியல் லாபத்துக்காக, பிரசாரத்துக்காக, போஸ்டர்களில் ராணுவத்தை பயன்படுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

Rahul explains about his controversial speech #SurgicalStrike

அடுத்த செய்தி