ஆப்நகரம்

இது பணக்காரர்களுக்கு தான் சாதகம் : ராகுல் காந்தி!

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பணக்காரர்கள் தான் பலனடைந்ததுள்ளனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Aug 2018, 6:39 pm
புதுடெல்லி: மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பணக்காரர்கள் தான் பலனடைந்ததுள்ளனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 3


பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘ பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறல்ல, இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல். இந்த நடவடிக்கை, பணக்காரர்களுக்கு தான் சாதகமாக உள்ளது.

ஏழைகள் நடுத்ததர மக்கள் பாதிப்படைந்தனர். பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நடவடிக்கையால் தீவிரவாதம், போலி ரூபாய் நோட்டு, கறுப்பு பணம் உள்ளிட்டவை முடிவுக்கு வரும் என பிரதமர் தெரிவித்தார். ஆனால் ரிசர்வ வங்கியின் அறிக்கைப்படி இந்த நடவடிக்கை தோல்வி. இதற்கான காரணத்தை பிரதமர் மோடி விளக்க வேண்டும். ’ என்றார்.

அடுத்த செய்தி