ஆப்நகரம்

சைக்களில் சென்று ஓட்டு கேட்கும் ராகுல்!

கர்நாடகா சட்டசபை தேர்லை முன்னிட்டு அங்குள்ள கோலார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சைக்கிளில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

Samayam Tamil 7 May 2018, 6:20 pm
கர்நாடகா சட்டசபை தேர்லை முன்னிட்டு அங்குள்ள கோலார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சைக்கிளில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
Samayam Tamil rahul cycle


வரும் 12ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்தியகருத்துக்கணிப்பில், தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பலம் ஓங்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி சுயேட்சை உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல், அங்கள்ள கோலார் பகுதியில் சைக்களில் சென்று ஓட்டு சேகரித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மக்களோடு மக்களாக இருந்து பிரச்சாரம் செய்தார். அதே போன்று, ராகுலும் மக்களோடு மக்களாக நடந்து சென்றும், சைக்களிலில் சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது மோடியின் ஆட்சியில்கச்சா எண்ணெய் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வங்கி மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி