ஆப்நகரம்

பிரபாகரனைப் பார்த்து வேதனை அடைந்தேன்: ராகுல் காந்தி

பிரபாகரனைப் பார்த்து வேதனை அடைந்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

TNN 10 Oct 2017, 6:50 pm
வதோதரா: பிரபாகரனைப் பார்த்து வேதனை அடைந்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahul gandhi opens up about prabhakarans death
பிரபாகரனைப் பார்த்து வேதனை அடைந்தேன்: ராகுல் காந்தி


காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

வதோதராவில் நேற்று தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்கு பதிலளித்த ராகுல், “பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம். பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன். மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம்.” என்று குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி