ஆப்நகரம்

அதற்கு அவசியமில்லை... நான் இப்படியே இருந்துடுறேன்... ராகுலின் 'நச்' பதில்!!

காங்கிரஸ் தலைவராக இருந்துதான் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவி்த்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2020, 8:36 pm
அமெரிக்காவைச் சேர்ந்த புத்தக ஆசிரியர்களான பிரதீப் சிப்பர், ஹர்ஸ் ஷா ஆகியோர் "India Tomorrow: Conversations with the Next Generation of Political Leaders" என்ற தலைப்பில் இந்தியாவின் பல்வேறு அரசியல் பிரபலங்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்.
Samayam Tamil rahul


ராகுல் காந்தியுடனான பேட்டியில், "காங்கிரஸார் விரும்பினால், நீங்கள் மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பீர்களா" என்ற கேள்வி ராகுலிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு, "காங்கிரஸ் கட்சியின் சார்பாகதான் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். கட்சியின் நலனுக்காக போராட எப்போதும் தயாராகவே உள்ளேன். ஏனெனில் காங்கிரஸ் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுதான் கட்சிக்காக போராட வேண்டும் என்றோ, அப்போதுதான் கட்சியை வலுப்படுத்த முடியும் என்ற அவசியமோ கிடையாது" என்று ராகுல் பதிலளித்தார்.

Rahul Gandhi: தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் வேண்டாம் - ராகுலைத் தொடர்ந்து பிரியங்கா அதிரடி!

"இந்திய நாட்டை மிகவும் நேசப்பதாலும், அதன் கட்டமைப்பு மற்றும் அடிப்படை சித்தாந்தங்கள் சிதையாமல் இருக்கவும், பிரதமர் மோடிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக தனிப்பட்ட முறையில் போராடி வருகிறேன். இதற்காக நான் பெருமைக் கொள்கிறேன்" என்றும் ராகுல் கூறியுள்ளார்.

முன்னதாக, "தங்களது குடும்பத்தை சேராதவர்கள், யாராவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும்" என்ற ராகுலின் கருத்தை தாமும் ஆமோதிப்பதாக அவரது தங்கை பிரியங்கா காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் பகிரங்கமாக அறிவித்தார்.

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் காந்தி

அப்போது, "மூத்த தலைவர்கள் கட்சியை வலுப்படுத்துவதைவிட, தங்களது வாரிசுகளுக்கு கட்சியில் பதவியை பெற்று தருவதிலேயே குறியாக உள்ளனர். தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதும் தொகுதியிலேயே மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், அவர்களின் வாரிசுகளுக்கு மட்டும் கட்சியில் பதிவியை பெற்று தந்துவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை மட்டும் அடங்கவில்லை" என்று ராகுல் கடுமையாக சாடினார்.

இதனைத் தொடர்ந்து. காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் தமது முடிவை மறுபரிசீலனை செய்யவதற்கு வாய்ப்பில்லை எனவும், பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி உணர்ச்சி பொங்க குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி