ஆப்நகரம்

பாஜக ஆட்சி ஜனநாயகத்தின் படுகொலை: ராகுல் காந்தி

பெரும்பான்மை இல்லாத நிலையிலும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 May 2018, 10:28 am
பெரும்பான்மை இல்லாத நிலையிலும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil RG
ஜனநாயகத்தை படுகொலை செய்த பாஜக- ராகுல் காந்தி


கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, பாஜக- 104, காங்கிரஸ்- 78 மற்றும் மஜத 37 இடங்களை பிடித்தன.

பெரும்பான்மைக்கான 112 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கின.


இது தொடர்பாக ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், மிகுந்த அரசியல் சர்ச்சைகளுக்கு இடையில் பாஜக-வின் எடியூரப்பா இன்று கர்நாடகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என கர்நாடாகவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் எடியூரப்பா முதலமைச்சரானதை கண்டித்து காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.ஏ-கள் விதான் சவுதான் முன்பு அமர்ந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் வெற்று வெற்றியால், பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது அரசியலமைப்பின் கேலிக்கூத்து. இந்த ஜனநாயக படுகொலையால் மக்கள் துயரமடைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி