ஆப்நகரம்

"மக்களைப் பேரழிவிற்குக் கொண்டு செல்ல வேண்டாம்" ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்...

Samayam Tamil 16 May 2020, 7:23 pm
காங்கிரஸ் கட்சி சார்பாக நாட்டின் இப்போதைய சூழல் குறித்து பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட ஆளுமைகளுடன் வாரந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பான வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil மக்களைப் பேரழிவிற்குக் கொண்டு செல்ல வேண்டாம் ராகுல் காந்தி
"மக்களைப் பேரழிவிற்குக் கொண்டு செல்ல வேண்டாம்" ராகுல் காந்தி


இந்நிலையில் இன்று ஊடகத்துடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி தனது சார்பாக சில கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது அவர்:
சாலையில் நடந்துகொண்டிருக்கும் புலம் பெயர்ந்த மக்களுக்குப் பணம் தேவை. கடன் அல்ல. துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப் பணம் தேவை. கடன் அல்ல. இதை நாம் அவர்களுக்குச் செய்யாவிட்டால், நாடே பேரழிவைச் சந்தித்து விடும்.

மக்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப் பரிசீலிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை தர வேண்டும், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய வழி வகை செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நம் எதிர்காலம்.

ராணுவ உபகரணங்கள் இறக்குமதி நிறுத்தம்!

இன்று நம் மக்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி அறிவித்துள்ள உதவி தொகுப்பு திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது ராகுல் காந்தி ஊடகத்தினர் முன் வைத்த 12 கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் அவர், ஊரடங்கை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது, பொருளாதார சிக்கல்களை கடப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் சில கருத்துகளை முன் வைத்தார்.

அடுத்த செய்தி